திருக்குறளும் மேலாண்மையும்
Abstract
தமிழ் இலக்கியத்தில் தனி சிறப்பு பெற்று பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட நூல் திருக்குறள். இது மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி. தனிமனிதன், தலைவன், அரசன், குடிமகன், தொழிலாளி, முதலாளி என்று எல்லாருக்கும் தெவையான கருத்துகளைத் தந்து வழிநடத்தும் வல்லமை திருக்குறளுக்குண்டு. இந்த ஆய்வு குறள் காட்டும் மேலாண்மை கருத்துகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு நூலியல் ஆய்வை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. திருக்குறள், திருக்குறள் விளக்க நூல்கள் பயன்படுத்தப்படும். திருக்குறளில் உள்ள பொருட்பால் அதிகரங்களில் காணப்படும் மேலாண்மை குறட்பாக்களை அடையாளம் கண்டு சூழலுக்கு ஏற்பப் பகுப்பாய்வு செய்தல். இன்றைய சூழலுக்குத் திருவள்ளுவரின் மேலாண்மை கருத்துகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை சான்றுகளுடன் விளக்குதல். பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான திருக்குறளின் மேலாண்மை கருத்துகள் இன்றும் மானிட வாழ்வை மேம்படுத்தும் என்பதை அறிந்து,திருக்குறளைத் துணைக் கொள்வோம்.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 சாந்தா காளியப்பன்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

