எட்டுத்தொகையில் தொழில்வழி அறம்

  • த சுதா தமிழ்த்துறைத் தலைவர், காமராஜ் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி

Abstract

சங்க காலத்தில் மக்களிடம் பாகுபாடு நில இயற்கையும் தொழில் சங்க காலத்தில் மக்களிடம் பாகுபாடு நில இயற்கையும் தொழில் பண்பையும் அடிப்படையாகக் கொண்டே இருந்தது. சமூகத்தில் தொழில் அடிப்படையில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என நான்கு பிரிவினர் இருந்தனர். ஒழுக்க நெறி கற்பித்து வந்தவரை அந்தணர் எனவும், நீதி வழங்கி நடுவுநிலை தவறாது, நாட்டு மக்களுக்கு கொண்டு கொடுத்து வந்தவரை அரசர் எனவும், வணிகர் என்பவர் வாணிகம் செய்தனர் எனவும், உயிர் வாழ்க்கைக்குஇன்றியமையாத உழவுத் தொழில் செய்து வந்தவரை வேளாளர் எனவும் வழங்கினர். தொழில்வழி அறம் புரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகியோர் தத்தம் கடமைகளையாற்றிச் சமுதாய ஆக்கத்திற்கு துணை நின்றனர் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Published
2025-03-21