சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களில் தாய்

  • அ கோதேஸ்வரி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீதபற்பநல்லூர்

Abstract

சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அனைத்து இலக்கியங்களுமே பெண்ணின் பெருமையைப் பேசுகின்றன. குறிப்பாக சங்க இலக்கியங்கள் பெண்ணின் பெருமையை அதிகமாக பேசுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் ஆண்பாற் புலவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலே பெண்பாற் புலவர்களின் பாடல்கள் காணப்படுகின்றன. எனினும் அப்பாடல்கள் சிறப்பான வகையில் அமைந்துள்ளன. பெண்ணின் உணர்வுகளையும், எண்ணங்களையும்,  பெருமைகளையும், சிறப்புகளையும் சிறப்புற எடுத்துரைக்கின்றன. அவ்வாறு எடுத்துரைக்கும் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் தாயின் சிறப்பையும் பெருமையையும் ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

Published
2025-03-21